வாழையைப்பற்றிய ஒரு கவிதையெழுதிட முற்பட்டபோது மனதினில் முந்தியடித்து முன்வந்த வரிகள்.......
இல்லறம் துவங்கும் திருமணம்
மரமாக முன்னின்று அலங்கரித்தாய்....
கனியாக பந்தியிலும்
இடம்பிடித்தாய்....
உணவும் கனியும் பரிமாற
இலையும்கூட
நீதந்தாய்...
மணமக்கள் அடையாளம்
கழுத்தினில் பூமாலை...
அங்கு நாராக
மலர் தொடுத்தாய்...
மந்திரங்கள் மறுத்து
மணம் புரிந்தாலும்
மாலையை மறுத்து மணம் புரிந்தவரில்லை...
வாழையடி வாழையாக வாழ்கவென வாழ்த்திலும் இடம்பிடித்தாய்...
இல்லறம் துவங்கும் திருமணம்
மரமாக முன்னின்று அலங்கரித்தாய்....
கனியாக பந்தியிலும்
இடம்பிடித்தாய்....
உணவும் கனியும் பரிமாற
இலையும்கூட
நீதந்தாய்...
மணமக்கள் அடையாளம்
கழுத்தினில் பூமாலை...
அங்கு நாராக
மலர் தொடுத்தாய்...
மந்திரங்கள் மறுத்து
மணம் புரிந்தாலும்
மாலையை மறுத்து மணம் புரிந்தவரில்லை...
வாழையடி வாழையாக வாழ்கவென வாழ்த்திலும் இடம்பிடித்தாய்...
வாழையில்லாத வாழ்க்கை
எவருக்கும் வாய்த்திட வாய்ப்பே இல்லை.....
- சக்திவேல் முருகன்...
எவருக்கும் வாய்த்திட வாய்ப்பே இல்லை.....
- சக்திவேல் முருகன்...