Sunday 29 November 2015

கலாம்....கலாம்





                 
                            கனவு நாயகன் எங்கள் கலாம்











பரந்த  தேசத்தில் சிறியு தீவாய் ஒரு கிராமம்

நீ பிறந்த காரணத்தால்  அது

 இந்தியாவின் சிறந்த கிராமம்……. இராமேஸ்வரம்   (பரந்த  தேசத்தில்…

 கால்வயிறு நிரம்பிய வேளையிலும்

கல்வி மேல் காதல் கொண்டாய்…

நேர்மையின் துணை கொண்டு

வறுமையை எதிர்கொண்டாய்…
                                                            


எண்ணத்தில் வலு கொண்டு

துனபத்திற்கு துன்பம் தந்தாய்….

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

உழைப்பின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.



கடைகோடி கிராமத்தில் பிறந்தாலும்

முதல்குடிமகனாக முடியும் என்று

முயற்சியின் வெற்றியை

உலகிற்கு உணர்த்தியோன் நீ…..

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

முயற்சியின் முழு உருவத்தை  பார்த்திருக்கலாம்.

அக்கினி ஏவி

ஆகாய சூரியனை நலம் விசாரித்தவன்

ஏழ்மையில் பிறந்து

 ஏவுகணை தயாரித்தவன்

அணுஆயுதம் சோதித்து

தேசத்தை முன்னிறுத்தியவன்

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

அறிவியலின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.



தமிழ்நாட்டிற்கு தண்ணீர்தான்

நாலாபுறமும் தகராறு…

தண்ணீரால் பிரிந்தவரும்

உனக்கு வடிக்கும் கண்ணீரால் இணைந்தாரே.

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

இனம் கடந்து நேசிக்கப்படும்

இந்தியனை  தரிசித்திருக்கலாம்.

மனிதர் வாழும் பூமியில்

மதங்கள் வேண்டுமானால்

வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.

மதவெறி மாய்ந்து போகட்டும்.

ஐந்துவேளை அல்லாவை தொழுதாலும்

ஏழுமலையான் சன்னதியில்

இந்திய தேசத்திற்காக

நெஞ்சுருகி வேண்டி நின்றாய்.

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இன்னும் ஒரு சந்ததி

தேசப்பற்றின் உருவத்தை  பார்த்திருக்கலாம்.

பாரதி கண்ட அக்கினிக் குஞ்சுகளுக்கு

சிறகு முளைக்கச்செய்து

2020 ல் வல்லரசு தேசத்தை

வடிவமைக்க நினைத்தவனே

சிறிது நாள் இங்கே நீ இருந்திருந்தால்

இளைஞர்களின் எண்ணத்தில்

நீ விதைத்த விதைகள் எல்லாம்

விருட்சமாகி

வல்லரசு தேசத்தை நீயே கண்டிருக்கலாம்.



உலகையே உன் அன்பால்

 நீ வென்றிருக்கலாம்

எங்கள் கலாம் கலாம் கலாம்………





(21ம் நூற்றாண்டின் ஒரே நாயகனின் மறைவிற்கு
எண்ணத்தில் வடித்த கண்ணீர் கவிதை)
















No comments:

Post a Comment